கடந்த நாள் இரவு ஓசூர் அருகே, பாகலூர் வெங்கடாபுரம் ஏரிக்கரையில் சென்று கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து, ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மீட்பு பணிகள் நேற்று இரவு நெடுநேரம் வரை நீடித்தது. கார், மற்றும் உயிரிழந்த நிலையில் இருவரது உடல்கள் crane உதவி கொண்டு மீட்கப்பட்டது.
இந்த நிலையில், ஏரியில் கார் விழுந்த இடத்தில், இன்று ஓசூர் சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்த இருபத்து ஐந்து வயதுடைய யோகேஸ்வரன் என்பவரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. உயிரிழந்த மகேஷ், லிண்டோ, யோகேஸ்வரன் ஆகிய மூன்று பேரும் நண்பர்கள் என்பதும், நேற்று இரவு ஏரிக்கரை ஓரத்தில் கார் ஓட்டி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து பாகலூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து வினவி வருகின்றனர்.