Hosur News, ஓசூர் செய்திகள் - வீரப்பன் மறைவு, ஓசூர் காடுகளையும், அவற்றின் யானைகளையும் அழிக்க உதவுகிறதா?

ஓசூர் அருகே, துன்புறுத்தப்படும் காட்டு யானைகள்.  அவற்றின், ஆயிரம், ஆயிரம் ஆண்டுகால, இடப்பெயர்ச்சி வழித்தடங்கள் மனிதர்களால் தடுக்கப்பட்டதால், யானைகள் வழி இல்லாமல் திணறல்.  மனிதர்கள் அவற்றைக் கண்டாலே கூச்சலிடுவதும், பட்டாசுகள் வெடிப்பதும், மின் வேலி கொண்டு தடுப்பதும், நாளொருபொழுதும் பெருகிக்கொண்டே போவதால், காட்டு யானைகளின் எண்ணிக்கை சுருங்கிக் கொண்டே வருகிறது. அரசு உடனடி தீர்வு காண வேண்டுமென தன்னார்வலர்கள் கோரிக்கை. 

தமிழ்நாட்டின் ஓசூர் பாதுகாக்கப்பட்ட காடுகள், தனது இயற்கை வளங்களாலும், குளிர்வான சூழலாலும், அங்கு வாழும் காட்டு யானைகளாலும் புகழ்பெற்றது. ஆனால், இப்பகுதியில், தற்போது காட்டு யானைகள், மனிதர்களின் இடையூறால், கடும் துன்பத்தை சந்தித்து வருகின்றன. ஆயிரம் ஆண்டுகளாக, காட்டு யானைகள் நடமாடும் வழித்தடங்கள், வீரப்பன் மறைவிற்கு பிந்தைய நாட்களில், மனிதர்கள் காட்டுப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் மேற்கொள்வதால் ஏற்படும், தடுப்புகள் யானைகள் தங்களது இயல்பான வாழ்க்கை முறையை இழந்து திணறுவதற்கு வழிவகை செய்கின்றன.

யானைகள் நடமாடும் வழித்தடங்கள், அவை புவி வரலாற்றின் சொத்துகள். காட்டு யானைகள், காலநிலையை பொறுத்து உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் தேடி, ஒர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்கின்றன. இந்த இடப்பெயர்ச்சி வழித்தடங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக, இயற்கையாகவே அமையப்பெற்றுள்ளது. ஓசூர் காட்டுப்பகுதி, தெற்கு இந்தியாவின் முதன்மையான யானை வழித்தடங்களில் ஒன்றாகும். இந்த வழித்தடங்கள், ஒட்டுமொத்த பருவமழை மற்றும் வலையிழைத்த வளர்ச்சி அமைப்புக்கு ஆதாரமாக இருக்கின்றன. இதன் ஒட்டுமொத்த பரப்பளவு சுமார், 1,280 சதுர கிலோமீட்டர் ஆகும். இது, ஓசூர்,தேன்கனிக்கோட்டை, சவளகிரி, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாகும்.

ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக நகரமயமாதல் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. விவசாயம், வீட்டு மனைப்பிரிவுகள், தொழிற்சாலைகள் மற்றும் செய்முறை தோட்டங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. இது மட்டுமல்லாது, நகர்ப்புற கான்கிரீட் மனிதர்களை, மகிழ்விப்பதற்காக, யானைகளின் வாழ்விடத்தில், Forest Resort என்கிற பெயரில் ஏராளமான தங்கும் விடுதிகள், புற்றீசல் போல முளைத்து வருகின்றன.  அவற்றில் தங்கும் மக்கள், இரவு நேர கேளிக்கை என்கிற பெயரில், நெருப்பூட்டி, கும்மாளம் அடித்து கூச்சலிடுவதால், அனைத்து வன விலங்குகள், குறிப்பாக காட்டு யானைகள் கடும் துன்பத்திற்கு உள்ளாகின்றன.  மேலும்,  காட்டு யானைகள் பயன்படுத்தும் வழித்தடங்கள் பெரும்பாலும் தடுக்கப்பட்டு விட்டன.

அதனால் யானைகள், அவசரமாக புது வழிகளைத் தேடி நகர்ந்து, மனிதரின் குடியிருப்புகளை அடைந்து விடுகின்றன. இது மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே நேரடி மோதலுக்கு வழிவகுக்கிறது.

தமிழ்நாடு அரசு, காட்டு யானைகளின் பாதுகாப்பிற்காக "ஓசூர் யானை வழித்தடத் திட்டத்தை" கொண்டு வர திட்டமிட்டது. இந்த திட்டம், யானைகளுக்காகவும் மனிதர்களுக்காகவும் நிலையான ஒரு வழித்தடத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை உள்ளடக்கியது. ஆனால், சரியான திட்டமிடல், அரசின் கவனக் குறைவு மற்றும் நடைமுறைப்படுத்துவதில் அலட்சியப் போக்கு ஆகியவற்றினால், இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதனால் யானைகள் கடும் துன்பத்தை சந்திக்கின்றன.

காட்டு யானைகள், மனித குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களுக்குள் நுழையும்போது கடுமையான துன்பங்களை சந்திக்கின்றன. பல்வேறு இடங்களில், கூச்சலிட்டு யானைகளை விரட்டுதல், அதாவது, மனிதர்கள், யானைகளை விரட்ட கூச்சலிட்டு, அவற்றை பயமுறுத்துகின்றனர்.

மேலும், பட்டாசுகள் வெடித்து, யானைகளை விரட்டுவதற்காக பட்டாசுகள் வெடிக்கப்படுகிறது. இது யானைகளின் செவிகளை கடுமையாக பாதிக்கிறது. மேலும், அவை அச்ச உணர்வில் அலறடித்து ஓடும் காட்சிகளை காண்பது வேதனையிலும் வேதனை.

பகுதி உழவர்கள் மட்டுமல்லாது, நிலங்களை Forest Resort, என்று பாதுகாக்க மின்வேலிகள் அமைக்கப்படுகிறது. இது யானைகளுக்கு ஆபத்தான மரணங்களை ஏற்படுத்துகிறது.

இவ்வாறான தாக்குதல்களால் ஓசூர் வனப்பகுதியில் காட்டு யானைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. யானைகள் தங்களது இயல்பான வாழிடங்களை இழந்து, உணவுப் பொருட்களும் தண்ணீரும் இல்லாமல் உயிரிழக்கின்றன. அவை மடிந்து விழுந்தாலும், கேட்பதற்கு யாரும் இல்லாத சூழல் நிலவுகிறது.  

யானைகளை, அவற்றின் வாழ்விடத்தில் துன்பமின்றி வாழ்வதற்கு வழிவகை செய்யும் தீர்வுகளை, உடனடியாக அரசும் பொதுமக்களும் செயல்படுத்த வேண்டும்.

யானைகளின் இயல்பான நடமாடும் வழித்தடங்களை மீட்க அரசின் விரைவான நடவடிக்கை கால தாமதம் இன்றி தேவைப்படுகிறது.

தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் காட்டு யானைகளைப் பாதுகாக்க சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

பொதுமக்கள், யானைகளின் முதன்மையை புரிந்துகொண்டு, யானைகளை பாதுகாக்க, விழிப்புணர்வு கற்றுக் கொள்ள வேண்டும்.

ஓசூர் காட்டுப்பகுதி  போன்ற இடங்களில் காட்டு யானைகளைப் பாதுகாக்கவில்லையெனில், அப்பகுதியின் சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். காட்டு யானைகள் பாதுகாக்கப்படுவது மட்டுமே, பசுமை வளங்களை பாதுகாப்பதற்கான ஒரு தீர்வாக அமையும்.

ஓசூர் காட்டு யானைகளின் துயரத்தை சரி செய்ய அரசும், பொதுமக்களும் சேர்ந்து செயல்பட வேண்டும். இயற்கை வளங்களை மீட்டெடுத்து, யானைகளின் வாழிடங்களைப் பாதுகாத்தால் மட்டுமே, இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இதைச் செய்வது, பசுமை வளங்களை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலின் சமநிலையை நிலைநிறுத்தவும் உதவக்கூடும்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: