புரோட்டா மூச்சுக்குழாயை அடைத்ததால் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

புரோட்டா மூச்சுக்குழாயை அடைத்ததால் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

எமன் எந்த வடிவில் வருவான் என்று யாருக்கும் தெரியாது என்பார்கள்.  இதை மெய்பிக்கும் விதமாக, புரோட்ட வாங்கி ஆசையுடன் மனையுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டவர், முச்சடைத்து இறந்துள்ளார்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் பாரதி நகரைச் சேர்ந்தவர் புருசோத்தமன் (33).

கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6 திங்களுக்கு முன்பு திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முக சுந்தரி என்பவரை திருமணம் செய்து கொண்டு கருவடிக்குப்பத்தில் வாழ்ந்து வந்தார்.

கடந்த கிழமை (வாரம்) சண்முகசுந்தரி தனது பெற்றோரை பார்க்க திருநெல்வேலி சென்றுள்ளார்.

நேற்றைக்கு முந்ஹ்டைய நாள் இரவு புருசோத்தமன் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வரும் போது உணவகத்தில் புபரோட்டா வாங்கி வந்துள்ளார்.

பின்னர் கைபேசியில் மனைவியுடன் பேசியபடியே புரோட்டாவை சாப்பிட்டுள்ளார்.

அப்போது புறையேறி மூச்சுக்குழாயில் புரோட்டா சிக்கி, அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

எதிர்முனையில் இணைப்பில் இருந்த சண்முக சுந்தரி தொடர்ந்து அவரிடம் போனில் பேச முயன்றும் முடியவில்லை. இதனால் பதறிப் போன அவர் இணைப்பை துண்டித்துவிட்டு, மீண்டும் கணவரின் செல்போனை தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை.

உடனே சண்முகசுந்தரி முத்தியால்பேட்டையில் உள்ள தங்களது உறவினரை தொடர்பு கொண்டு மேற்கண்ட தகவலை தெரிவிக்க, உறவினர்கள் வீட்டுக்கு சென்றனர்.

வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், சாளரம் வழியாக பார்த்த போது புருஷோத்தமன் புரோட்டா சாப்பிட்ட நிலையிலேயே மயங்கிக் கிடந்தார்.

தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து, உள்ளே சென்று மயங்கிக் கிடந்த புருசோத்தமனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை ஆய்வு செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

லாஸ்பேட்டை காவலர்கள் நிகழ்வு நடந்த வீட்டை பார்வையிட்டனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: