ஸ்ரேயாவை தேடி அலையும் எஸ் ஜே சூரியா - அவரை இவர் கணவில் கண்டதாலாம்!!!
நடிகை ஸ்ரேயாவை கிளு கிளு கதைகளுக்கு பெயர் பெற்ற எஸ் ஜே சூரியா தேடி அலைந்து கொண்டிருக்கிறாராம்.
ஓசூர் ஆன்லைன் சார்பில், அவரிடம் ஏன் ஓய்வு பெற்ற நடிகையை தேடி அலைகிறீர்கள் என்று கேட்டதற்கு... "எனக்கு ஸ்ரேயாவை ஓயாம கணவில் வர்ராங்க.. அதனால் தான்" என்கிறார் ஒரு கிளு கிளுப்பு ஓசையுடன்.
கோடீசுவரர் ஆவது எப்படி என்று பல புத்தகங்கள் எழுதிக் கொண்டிருந்த எஸ் ஜே சூரியாவின் ஒருநாள் தூக்கத்தில் ஸ்ரேயாவுடன் நடிப்பதுபோல் கனவு காண உடனே அவரை இவர் தேட துவங்கிவிட்டார்.
இப்போது ஸ்ரேயாவை வலைபோட்டு தேடிக்கொண்டிருக்கிறார். இது உண்மைதானா என்ற போது, இரட்டை பொருள் வசனம் புகழ் ஏ.எல்.சூர்யா கூறியது:
"உண்மையிலும் உண்மை தான். அனிதா பத்மா பிருந்தா என்ற கதை எழுதியிருக்கிறேன்.
திரையுலகை பின்னணியாக கொண்ட கதை அது. அந்த கதை எழுதும் போதுதான் ஸ்ரேயாவுடன் நடிப்பதுபோன்ற கனவு கண்டேன்.
பிறகு கதையை படமாக்க முடிவு செய்ததுடன் படம் எடுத்தல், இசை, பாடல், இயக்கம், நடிப்பு என எல்லா பொறுப்பையும் நானே ஏற்று செய்ய முடிவு செய்தேன்.
சிரேயாவை நேரில் சந்தித்து இது தொடர்பில் எடுத்துக் கூறி நேரம் கேட்க உள்ளேன்.
மேலும் 2 முன்னனி நடிகைகள் அந்த படத்தில் என்னுடன் நடிக்க உள்ளனர்.
ஏற்கனவே 5 புத்தகங்கள் எழுதி இருக்கிறேன்.
தமிழ்நாடு, கேரளாவில் படப்பிடிப்பு நடக்கிறது. இதுவரை படப்பிடிப்பு நடக்காத பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த உளளதால் அந்த இடங்களின் பெயர்களை கமுக்கமாக வைத்திருக்கிறேன்" என்றார்.