மின்சார வாரிய துணை மின்நிலையங்களில் மற்றும் அவை சார்ந்த இடங்களிலும் திங்கள் தோறும் ஒரு நாள் முழுவது மின் பகிர்வதை நிறுத்தி ஒக்கிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த 2 ஆம் நாள் பாகலூர் மற்றும் சூளகிரி பகுதியில் பணிகள் மேற்கொள்வதற்காக மின் நிறுத்தம் செய்யப்பட்டது.
இன்று, சூலை 6 ஆம் நாள், சிப்காட் பகுதிகளில் மின் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஓசூர் நகர் பகுதியில் உள்ள
1. டைடான் 33/11 KVA
2. ஓசூர் 33/11 KVA
3. ஓசூர் 110 KVA
ஆகிய துணை மின்நிலையங்களில் வரும் 11 ஆம் நாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்தி ஒக்கிடும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் வரும் 8 ஆம் நாள்,
1. தளி
2. கெம்பட்டி
3. தேண்கனிக்கோட்டை
4. அஞ்செட்டி
5. மீனாட்சிபுரம்
6. கெலமங்கலம் தாழ்நிலை
7. கெலமங்கலம் -ஆளில்லா
8. உத்தனப்பள்ளி
துணை மின்நிலையங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் அந்த மின் நிலையங்களை சார்ந்துள்ள பகுதிகளில் நாள் முழுதும் மின் பகிர்மானம் இருக்காது.