பீர் குப்பியால் தாக்கி முதியவரை கொன்ற வாலிபர்

பீர் குப்பியால் தாக்கி முதியவரை கொன்ற வாலிபர்

ஓசூர் அருகே பாகலூரை அடுத்துள்ள பன்னப்பள்ளி ஊரை சேர்ந்தவர் வெங்கடேசப்பா (வயது70).

இவர் கூலி வேலைகள் செய்து தன் பிழைப்பை கவணித்து வந்தார். இவர் பாகலூரில் காவல் நிலையம் பின்புறம் பெரியார் நகர் என்ற இடத்தில் அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

வெங்கடேசப்பா பாகலூர் தேர்பேட்டை பகுதியை சேர்ந்த சரத்குமார் (25) என்பவரிடம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த நாள் இரவு இருவரும் வெங்கடேசப்பா வீட்டில் மது அருந்தியுள்ளனர்.

அப்போது சரத்குமார் தன்னிடம் வாங்கிய ரூ.5 ஆயிரம் பணத்தை வெங்கடேசப்பாவிடம் திருப்பி கேட்டார். அப்போது திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சரத்குமார் பீர் குப்பியால் வெங்கடேசப்பாவின் தலையில் அடித்தார்.

இந்த தாக்குதலில் முதியவரின் தலியில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விதஹ்திலேயே  உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பாகலூர் காவலர்கள் நிகழ்விடத்திற்கு சென்று வெங்கடேசப்பாவின் உடலை கைப்பற்றி அடல் கூறு ஆய்விற்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்த சரத்குமாரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: