சிலை கடத்தல் வழக்கில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அலுவலரான பொன் மாணிக்கவேல் அறிவன் கிழமை ஒரு மனுவாக தாக்கல் செய்தார்.
அவர் எந்த அமைச்சர் பெயரையும் அப்பொழுது வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
இதையடுத்து உரிய ஆதாரங்களுடன் ஆகஸ்ட் 6 ஆம் நாளுக்குள் பதிலளிக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய நிலையில் சில ஊடகங்கள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் - சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தான் அந்த குற்ற அமைச்சர்கள் என பரபரப்பை ஏற்படுத்தி தங்களது ஊடக விற்பனையை பெருக்கும் நோக்கில் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில் ஆம்பூரில் ஊடகத்தாருக்கு நேர்காணல் கொடுத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சேவூர் ராமச்சந்திரன் கூறியதாவது:
பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் யார் பெயரையும் குறிப்பிடாத நிலையில் எங்களுக்கு எதிராக திட்டமிட்டு பொய் செய்தியை தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த 2 அமைச்சர்கள் நாங்கள் என்பது முற்றிலும் பொய்யானது.
செய்தியை வெளியிட்ட அந் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்