நொடிந்தவர் சட்டத் திருத்த சட்ட வரைவு நிறைவேறியது

நொடிந்தவர் சட்டத் திருத்த சட்ட வரைவு நிறைவேறியது

நொடிந்தவர் சட்டத் திருத்த சட்ட வரைவு நிறைவேறியது

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நொடிந்தவர் சட்டத் திருத்த சட்ட வடிவு  ௨019 நேற்று (29.07.2019) நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் நொடிந்தவர் சட்டத் திருத்த சட்ட வரைவை நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், நொடிந்தவர் சட்டத்தை நீர்த்து போகச் செய்யவே இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படுவதாக அச்சம் நிலவுகிறது. அதை நீர்த்து போகச் செய்ய நடுவன் அரசு அனுமதிக்காது. கடன் பிரச்னைக்கு எளிதில் தீர்வு காண்பதை உறுதி செய்யவே சட்டத் திருத்தம் செய்யப்படுகிறது என்றார்.

அப்போது காங்கிரஸ் உறுப்பினர் கபில் சிபல் பேசுகையில்

"தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்படாமல் நாடாளுமன்றத்தில் சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உருக்கு, மனை வணிகம், ஆட்டோ மொபைல் போன்ற துறைகள் மிகப்பெரும் இடர்பாடுகளை எதிர் கொண்டுள்ளன.

நாட்டின் பொருளாதார நிலை இக்கட்டான நிலையில் தத்தளித்து சென்று கொண்டிருக்கிறது" என்றார்.

இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் நொடிந்தவர் சட்டத் திருத்த சட்ட வரைவு சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: