கட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர்! வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி!!!

கட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர்! வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி!!!

காதலுக்கு கண் இல்லாமல் இருக்கலாம், ஆனால் இந்த காதல் கவர்வுகளுக்கு இத்தனை நாட்களாக பால் இணம் என்று ஒன்று இருந்தது.

தற்பொழுது, இந்த பால் இண கவர்ச்சி இல்லாமல், ஆணுடன் ஆண்,  பெண்ணுடன் பெண் காதல் என்ற அளவில் நமது அறிவு முதிர்ச்சியற்று போய் கொன்டிருக்கிறது.

இந்த அசிங்கங்களை அசிங்கம் என்று சொன்னால், உச்ச நீதிமன்ற நீதி அரசர்கள் நம்மை தண்டித்தாலும் தண்டிப்பார்கள்!!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கடம்பாகுடியைச் சேர்ந்த வினிதாவிற்கும், சானா ஊரணியைச் சேர்ந்த ஆரோக்கிய லியோவிற்கும் கடந்த சனவரியில் திருமணம் நடந்தது. இருவரும் காளையார்கோவிலில் வாழ்ந்து வந்தனர்.

மார்ச்சில் ஆரோக்கிய லியோ, பெண்டாட்டியை இங்கு தனியாக விட்டுவிட்டு சிங்கப்பூர் சென்றுவிட்டார்.

அதன்பின் வினிதா ‘டிக் டாக்’ செயலியில் மூழ்கியுள்ளார். இதன் மூலம் திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த ஆரோக்கிய லியோ தனது மனைவியை தொலைபேசியில் கண்டித்துள்ளார்.

ஆனால் காதல் மோகத்தால், கணவரின் பேச்சை கண்டுகொள்ளாத வினிதா, தனது கையில் அபியின் படத்தை ‘டாட்டூ’ வரைந்துள்ளார்.

இதை காணொலி அழைப்பில் பார்த்த ஆரோக்கிய லியோ, வினிதாவிடம் கூறாமலேயே ஊருக்கு வந்தார்.

வினிதாவிடம் மேலும் விசாரித்த போது 20 பவுன் நகைகள், ஆரோக்கிய லியோ அனுப்பிய பணம் என அனைத்தையும் அபியிடம் கொடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து வினிதாவின் அம்மா அருள் செயராணியிடம் ஆரோக்கிய லியோ தெரிவித்துள்ளார். மேலும் வினிதாவையும் அவரது அம்மா வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினிதா, அவருடைய உடன் பிறந்த அக்கா புனிதாவின் 25 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு மாயமானார்.

இதனால் அதிர்ச்சியடைந்த வினிதாவின் அம்மாவும், வினிதாவின் கணவர் ஆரோக்கிய லியோவும் திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: