இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி

இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி

இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது. இந்திய பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்கிறது என்பதை அரசு புரிந்து கொள்ளும் வேகத்தைவிட பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது என்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வாழும் இந்தியரான அபிஜித் பானர்ஜி அவரின் மனைவி எஸ்தர் டூப்ளோ ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு கடந்த நாள் (14 அக்டோபர் 2019) அறிவிக்கப்பட்டது.

சிறந்த பொருளாதார வல்லுநரான அபிஜித் பானர்ஜி, போர்டு பவுண்டேசன் சார்பில் செயல்படும் மசசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் மசசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் 14.10.2019 அன்று ஊடகவியலாளர்களிடம் அபிஜித் பானர்ஜி அளித்த நேர்கானலில் கூறியதாவது:

'இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் சென்று வருகிறது. பொருளாதாரத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதை அரசு தற்பொழுது தான் உணர்ந்து வருகிறது. என்னைப் பொறுத்தவரை இந்தியாவின் பொருளாதாரம் மோசமாகத்தான் இருக்கிறது.

வரும் நாட்களில் இந்தியாவின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக எவ்வாறு அரசு சார்பில் பணியாற்றப் போகிறார்கள் என்பதைக் காட்டிலும், தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே அடிப்படை. அதைப்பற்றித்தான் என்னால் கூற முடியும்.

நாட்டின் மாதிரி கணக்கெடுப்பு ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை ஊர் புறங்களிலும், பேரூர் புறங்களிலும் மக்களின் சராசரி நுகர்வு குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது.

அதில் நுகர்வு 2014௧5 மற்றும் 2017௧8-ம் ஆண்டுகளில் சராசரி நுகர்வு குறைந்துள்ளது.

இதுபோன்ற நுகர்வு குறையும் நிகழ்வு மிக மிக நீண்ட நாட்களுக்கு பின் நடக்கிறது. இது நமக்கு ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

எந்த புள்ளிவிவரங்கள் சரியானது என்பது குறித்து இந்திய அரசு பலவிதமான பரப்புரைகளை செய்து வருகின்றது. அதாவது அனைத்து புள்ளிவிவரங்கள் குறித்தும் இந்திய அரசு ஒரு கணிப்பு வைத்திருக்கிறது.

தனக்கு எந்த புள்ளிவிவரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறதோ அது தவறான புள்ளிவிவரங்கள் என்று கூறுகிறது. அப்படி எந்த புள்ளிவிவரங்களும் இல்லை.  எல்லா புள்ளி விவரங்களும் சரியானவை தான்.

ஆனால், பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்கிறது என்பதை மட்டும் இந்திய அரசு தற்பொழுது தான் வேகமாக உணர்ந்து வருகிறது. ஆனால், அரசு உணரும் வேகத்தைக் காட்டிலும் மிகவேகமாக பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்கிறது.

அரசின் புரிந்துகொள்ளும் வேகம் அளவு என்பது நமக்குத் தெரியாது. புள்ளிவிவரங்கள் குறித்து ஏராளமான கருத்து வேறுபாடுகளும் மறுப்புகளும் இருக்கின்றன. ஆனால், பொருளாதாரச் சரிவு மட்டும் வேகமாக இருக்கிறது.

உண்மையில் என்ன செய்யப்போகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. இந்திய அரசு மிகப்பெரிய நிதிப் பற்றாக்குறையில் இருக்கிறது. ஆனால், தற்போது நிதி அறிக்கையில் இலக்குகளையும், நிதி இலக்குகளையும் அடைய அறிவுறுத்தி முயற்சித்து வருகிறது.

என்னைப் பொறுத்தவரை பொருளாதாரம் அந்தரத்தில் தொங்கும்போது, நிதி நிலைத்தன்மை குறித்து பெரிதும் கவலைப்படத் தேவையில்லை, தேவையைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும். இப்போது இந்தியாவில் உள்ள மிக அடிப்படையான இடர்பாடு "தேவை (டெமன்ட்)" குறைந்து வருவதுதான்'.

இவ்வாறு அபிஜித் பானர்ஜி தெரிவித்தார்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: