டிக் டாக் மோகத்தினால் ஒசூர் இளைஞர் பலி

டிக் டாக் மோகத்தினால் ஒசூர் இளைஞர் பலி

ஒசூர் பார்வதி நகர் காலேகுண்டா பகுதியை சேர்ந்தவர் 22 வயதுடைய வெற்றிவேல்  இவர் கட்டிட தொழிலாளியாக ஓசூர் பகுதிகளில் வேலை செய்து வந்துள்ளார்.




இவருக்கு ஜோதி என்ற மனைவியும், சரண் என்ற 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஜோதி தற்போது மீண்டும் கருவுற்றுள்ளார்.

வெற்றிவேல் டிக் டாக் மோகமுடையவர். அடிக்கடி டிக் டாக் காணொளி பதிவுகளை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று சூன் 10 ஆம் நாள் மாலை வெற்றிவேல் குடிபோதையில் தனது நன்பர்கள் சிலருடன் தேர்பேட்டை ஏரியில் மீன் பிடித்துள்ளார். அப்போது டிக் டாக் மோகத்தில் அவர் பிடித்த மீனை உயிருடன் தனது வாயில் விட்டு டிக் டாக் காட்சி எடுத்துள்ளார். அப்போது திடீரென மீன் அவரது உணவு குழாய்குள் செல்வதற்கு பதிலாக மூச்சு குழாயில் சென்றுள்ளது. இதில் மூச்சு விடமுடியாமல் திணறிய வெற்றிவேல் துடி துடித்துள்ளார்.

அவரது நன்பர்கள் அவரை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவரது உடலை ஆய்வு செய்துவிட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இன்று 11 சூன் அன்று அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அவரது மூச்சு குழாயில் சென்ற மீன் இறந்த நிலையில் எடுக்கப்பட்டது. பின்னர் வெற்றிவேலின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

டிக் டாக் மோகத்தால் மீனை உயிருடன் விழுங்கிய இளைஞர் உயிரை மாய்த்த நிகழ்வு ஒசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வு குறித்து ஒசூர் காவல் துறையினர் விணவி வருகின்றனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: