Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ் ஏ சத்யா, நேரடி கள ஆய்வு!

ஓசூர் பன்னிரண்டாவது வார்டுக்கு உட்பட்ட பிருந்தாவன் நகர், நேதாஜி பூங்கா,  பகுதிகளில் முறையான சாலை, கழிவுநீர் வடிகால் ஓடை, குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர, மாமன்ற வார்டு உறுப்பினர் திருமதி பெருமாயி, ஓசூர் மேயர் எஸ் ஏ சத்யா அவர்களிடம்,  கோரிக்கை வைத்திருந்தார். 

அதை தொடர்ந்து கடந்த நாள், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ் ஏ சத்யா அவர்கள், கள ஆய்வு மேற்கொண்டு, வளர்ச்சி பணிகளை விரைவு படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். 

அவர் கள ஆய்வு மேற்கொள்ளும் பொழுது, அவருடன், மாமன்ற வார்டு உறுப்பினர் திருமதி பெருமாயி, அருள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: