ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், வழக்கத்தை விட கூடுதலாக, அதாவது நூற்று இருபத்து மூன்று விழுக்காடு அளவிற்கு, இந்த ஆண்டு நவம்பரில், மழை பொழியும் என வானிலை ஆய்வு வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த அக்டோபர் பதிணைந்தது முதல், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, மழை பொழிந்து வருகிறது.
நாளை, நவம்பர் மூன்று முதல், நவம்பர் பதினொன்று வரை, ஓசூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில், மழை பொழியும் என்றும், நவம்பர் ஐந்துக்கு பின், பெருமழையாக இருக்கும் என கூறுகின்றனர்.








