பில்லி சூனிய செயல்கள் நிகழ்த்தப்படும்போது அல்லது செய்ய முயற்சிக்கப்படும்போது பில்லி சூனிய எதிர்ப்பு சட்டம் செயல்படுத்தப்படலாம்: கர்நாடக உயர்நீதிமன்றம்

பில்லி சூனிய செயல்கள் நிகழ்த்தப்படும்போது அல்லது செய்ய முயற்சிக்கப்படும்போது பில்லி சூனிய எதிர்ப்பு சட்டம் செயல்படுத்தப்படலாம்: கர்நாடக உயர்நீதிமன்றம்

கர்நாடக மனிதாபிமானமற்ற தீய நடைமுறைகள் மற்றும் பில்லி சூனிய தடுப்பு மற்றும் ஒழிப்பு சட்டம் (Black Magic), 2017 இன் சட்டப்பிரிவுகள், பிளாக் மேஜிக் உண்மையில் நிகழ்த்தப்படும்போது அல்லது குறைந்தபட்சம் இந்தச் செயலைச் செய்ய முயற்சித்தால் மட்டுமே செயல்படுத்த முடியும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியது.

2017 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் ஒரு நபர் அளித்த புகாரை தள்ளுபடி செய்யும் போது நீதிமன்றம் இது தொடர்பாக ஒரு கருத்தை மேற்கொண்டது.

கணவர் ஒருவர் தனது மனைவி, அவரது நண்பருடன் வாட்ஸ்அப் அரட்டைகள் மூலம் பிளாக் மேஜிக் செய்து, தம்மையும் தனது தாயின் மொபைலையும் அழித்தொழிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.

சட்டம் என்ன சொல்கிறது?


இந்தச் சட்டத்தின் பிரிவு 3 இன் பல்வேறு சட்ட பிரிவுகள் பற்றி குறிப்பிடுகையில், நீதியரசர் எம். நாகப்பிரசன்னா, சட்டத்தின் பிரிவு 3 (1) எந்தவொரு மனிதாபிமானமற்ற, வெளியேற்றப்பட்ட செயல் மற்றும் பில்லி சூனியத்தை "நிகழ்த்துதல்" என்ற வார்த்தையுடன் தொடங்குகிறது. எனவே இந்த சட்ட பிரிவின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க மனிதாபிமானமற்ற தீய நடைமுறை அல்லது பில்லி சூனியம் செயல் நடத்தப்பட வேண்டும் அல்லது முடிக்கப்பட வேண்டும்.

இந்த வழக்கு நடவடிக்கையில், நீதிமன்றம், "பிளாக் மேஜிக் சட்டத்தின் கீழ் செல்லப்பட்டுள்ள குற்ற செயல்களை குற்றம் சாட்டப்பட்ட மனைவி செய்ய முயற்சிக்கவில்லை அல்லது எந்த செயலும் செய்யப்படவில்லை. வாட்ஸ்அப் அரட்டைகள் முற்றிலும் தெளிவற்றவை. எனவே, மனைவி தமக்கு எதிராக வேறொரு குற்றவியல் வழக்கைப் பதிவு செய்வதற்கு எதிர்ப்பாக, கணவர் கற்பனையான இந்த சந்தேகத்திற்குரிய குற்றச்சாட்டை பதிவு செய்து எதிர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாகிறது".

2018 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், ஒருவருக்கொருவர் எதிராக புகார் அளித்தனர். மனைவி கணவர் மீது வரதட்சணை துன்புறுத்தல் புகார் அளித்ததோடு, திருமணத்தை ரத்து செய்வதற்கும், இரண்டு குழந்தைகளை தமது கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினார்.  அதைத்தொடர்ந்து இந்த வழக்கை தொடுத்த கணவர் தனது மனைவி மற்றும் மனைவியின் நண்பர் நண்பர் மீது கொலை முயற்சி மற்றும் whatsapp அரட்டைகளின் அடிப்படையில் மட்டுமே பில்லி சூனியம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தாய்க்கு ஆறுதல்


மனைவிக்கு எதிராக கணவர் தாக்கல் செய்த குற்றவியல் வழக்கை நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், கணவருக்கு எதிராக மனைவி தாக்கல் செய்த வரதட்சணை துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆனால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவரது தாய்க்கு விலக்கு அளித்தது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: