Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur Daily Podcast 05 June HosurWeather, HosurNews, HosurOnline, HosurGoldPrice, HosurPanchangam

Hosur’s daily podcast with weather, panchangam, astrology, and top news. Updated every morning by 5 AM. Stay informed with HosurOnline.

🌤️ Hosur Weather Update – Temperature, wind, rain possibilities.

📿 Hosur Panchangam – Tamil calendar highlights for the day.

🌟 Daily Astrology – Zodiac predictions & rasi palan.

📰 Top Hosur News – A quick roundup of today’s local headlines.

🎧 Listen now and stay updated with what matters in and around Hosur.
🗓️ Episode Date: 04 June 2025
📍 Language: Tamil

Share this podcast with friends & family in Hosur – let’s stay informed together!

Follow us on https://youtube.com/@hosuronline 

நேற்று தங்கம் இருபத்தி இரண்டு கேரட், ஒரு கிராம் விலை ரூபாய் ஒன்பதாயிரத்தி தொன்னூறு.  வெள்ளி  ஒரு கிராம் விலை ரூபாய் நூற்றி பதினான்கு.

ஓசூர் தொடர்வண்டி நிலையம் அருகே, அனுமதி பெற்ற வழித்தடத்தை மூடிய தென்மேற்கு ரயில்வே. இதனால் சுமார் 5000 குடும்பங்கள் மருத்துவத் தேவைக்கு மூன்று கிலோமீட்டர் சுற்றி பயணிக்கும் துன்ப நிலை.  ஓசூர் பகுதியை தெற்கு ரயில்வேயுடன் இணைக்க பொதுமக்கள் கோரிக்கை. 

ஓசூர் மூக்கொண்டபள்ளி எம்ஜிஆர் நகர் பகுதியில், திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்த காதலர்கள் அடுத்தடுத்து தற்கொலை.  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 23 வயது ஆணும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணும் ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த நிலையில், சிறிய அளவிலான சண்டையினால், அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

புதிதாக மேம்படுத்தப்பட்டு திறக்கப்பட்ட எம்ஜிஆர் சந்தை வளாகத்தில், ஏற்கனவே நடைபெற்று வந்த புதன்கிழமை சந்தையை, மாநகராட்சி அப்புறப்படுத்தியதால், பாதிப்படைந்த 50-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் கடந்த நாள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

தேன்கனிகோட்டையைச் சேர்ந்த லிங்கோஜிராம், தேன்கனிக்கோட்டை 11 வது வார்டு கவுன்சிலராக இருந்தார். அவர், திமுக தகவல் தொழில்நுட்ப அணி, தலித் தொகுதி சமூக வலைதள ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.  அவருக்கு வயது 45.  கடந்த நாள், தலை குப்புற விழுந்த நிலையில், மூக்கில் இருந்து குருதி கசிவுடன், அவரது வீட்டில், இறந்து கிடந்தார்.  காவல்துறையினர் இதை மர்ம மரணமாக கருதி வினவி வருகின்றனர். 

ASTC நூறடி சாலை மற்றும் உள் வட்டச் சாலை சந்திக்கும் பகுதிக்கு, சூட்டப்பட்ட பெரியார் சதுக்கம் என்கிற பெயர் தங்களுக்கு பிடிக்கவில்லை என கூறி,  எட்டு பேர், ஓசூர் சாராட்சியர் அலுவலகம் அருகே உண்ணாவிரதம் இருக்க முயன்ற நிலையில், நகர் காவல் துறையினர், அவர்களை கைது செய்து பின்னர் விடுவித்தனர். 

ஓசூர் அடுத்த பாகூர் எனும் இடத்தில், சங்கரப்பா என்பவரது பட்டா நிலத்தில், பட்டியல் இனத்தவர்கள் முனீஸ்வரன் கோவில் கட்டி வழிபட்டு வந்ததாகவும், அதன் மதிலை, நிலத்தின் உரிமையாளர் சங்கரப்பா அகற்றியதால், மக்கள் வேதனை. 

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்திற்கு, இழப்பீட்டுத் தொகை வழங்காமல் இழுத்தடித்து வந்த ஓசூர் மாநகராட்சியின் சொத்துக்களை, ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களால், மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

கெலவரப்பள்ளி அணைக்கு  நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு தராமல் இழுத்தடித்து வருவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் ஆணை வழங்கப்பட்டதாக தகவல்.

ஓசூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெண்கள் அணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: