எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சவுரவ் குமாரின் திருமண உறவு பகையாக மாறிய பின், திருமண முறிவு மட்டுமே வாய்ப்புள்ள ஒரே வழியாக தோன்றியது. உணர்ச்சிகரமான கொந்தளிப்பு சூழ்ந்த மனநிலையில், பொருளாதார தாக்கத்தின் அளவை குமார் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், 2020 ஆம் ஆண்டில் திருமணம் முறிவு நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டபோது, தொழிலதிபர் தனது முன்னாள் வாழ்க்கைத் துணைக்கு திங்கள் ஒன்றிற்கு Rs.20,000 வாழ்க்கை பொருள் உதவியாகவும் (ஜீவனாம்சம்), மேற்கொண்டு Rs.15,000 குழந்தை கல்வி மற்றும் வளர்ப்பு உதவித்தொகையாகவும் செலுத்த நீதிமன்றம் ஆணையிட்டது.
"நான் இப்போது மற்ற வாய்ப்புகள் மூலம் எனது வருமானத்தை பெருக்க முயற்சிக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் வாழ்க்கை பொருளாதார உதவி மற்றும் குழந்தை ஆதரவு எனது வருமானத்தில் ஒரு பெரிய கொடுப்பது என்பது எனது பொருளாதார நிலையை பிளவுபடுத்துவதாக உள்ளது" என்று குவஹாத்தியைச் சேர்ந்த 40 வயதான அவர் கூறுகிறார்.
பெண்கள் வழக்கமாக வாழ்க்கை பொருளுதவி சுமைகளை மட்டுமல்லாது, வரதட்சணை மற்றும் கணவரின் குடும்பத்தால் வன்முறை என குற்றச்சாட்டுகளை அடுக்குவதோடு அல்லாமல், நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் பெண்களுக்கு ஆதரவான மனநிலையை செலுத்துகின்றனர்.
இந்த செயல்பாட்டில், திருமண முறிவில் தங்கள் பொருளாதார மற்றும் சட்ட உரிமைகளை முன்னிலைப்படுத்தும் போது, தவறான குற்றச்சாட்டுகள் மற்றும் வரதட்சணை போன்ற போலி வழக்குகளில் பாதிக்கப்படும் ஆண்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
திருமணம் முறிவு நடவடிக்கைகளின் போது மேலாதிக்கம் பெற, பெண்கள் தங்கள் கணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க, போலி வழக்குகளைத் தாக்கல் செய்வதாக அறியப்படுகிறது. ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் சஞ்சய் குமார் திவேதி, கணவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களால் ஏற்படும் கொடுமைகளை தீர்வு செய்வதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498A அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது இப்போது பெண்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று கருத்து கூறினார்.
திருமண முறிவில் பிரிந்து செல்லும் வாழ்க்கை துணைக்கு எதன் அடிப்படையில் பொருளாதார உதவி முன் நிறுத்தப்பட்டு முடிவெடுக்கப்படுகிறது?
வாழ்கை பொருளுதவி அல்லது செலவீனங்களுக்கான உதவி என்பது திருமண முறிவின் போது அல்லது அதற்குப் பிறகு ஒரு வாழ்க்கைத் துணையால் மற்றவருக்கு வழங்கப்படும் பொருளாதார உதவி ஆகும். இது இனி பாலின அடிப்படையிலான முடிவு அல்ல, ஆனால் வாழ்கைத் துணைகளின் பொருளாதார திறனைப் பொறுத்தது என்று சட்டப்படியாக பொருள் கொள்ளப்படுகிறது.
இருப்பினும், பொதுவாக, பெண்கள் வேலைக்குச் செல்லாத நிலையில் அல்லது குறைந்த வருமானத்தைக் கொண்டவர்களாக இருக்கும்போது, ஆண் தான் வாழ்க்கை பொருளாதார உதவி செலுத்துகிறார். இருப்பினும், இது வரையறுக்கப்பட்ட சட்ட நடைமுறை அல்ல. கணவர் ஊனமுற்றவராகவோ அல்லது வருவாய் ஈட்ட இயலாதவராகவோ இருந்தால், கணவருக்கும் நீதிமன்றம் வாழ்கை பொருளாதார உதவி வழங்க முடியும்.
வாழ்கை பொருளாதார உதவி கோரும் நபர், திருமணத்தில் நம்பிக்கை அற்றவர் அல்லது ஒழுக்கமற்றவர் என்பதைக் கண்டறிந்தால், வாழ்கை பொருளாதார உதவி தருவதை மறுக்கலாம். மேலும், பிரிந்து செல்லும் மனைவி நன்றாக வருவாய் ஈட்டுகிறார் என்றால், நீதிமன்றத்தால் அவருக்கு கணவர் மூலம் கொடுக்க வேண்டிய வாழ்க்கை பொருளாதார உதவி மறுக்கப்படலாம்.
இடைக்கால மற்றும் இறுதி வாழ்க்கை பொருளாதார உதவி: சில சூழ்நிலைகளில், திருமணம் முடிவு குறித்த வழக்கு நடவடிக்கைகளின் போது கணவர் தனது மனைவிக்கு பொருளாதார அடிப்படையில் உதவி அளிக்க வேண்டும். இது இடைக்கால வாழ்க்கை பொருளாதார உதவி என்று அழைக்கப்படுகிறது.
திருமணம் முறிவு வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போது பொருளாதார ரீதியாக வலுவில்லாத வாழ்க்கைத் துணைக்கு உதவி வழங்குவதே இடைக்கால வாழ்க்கை பொருளாதார உதவி வழங்கும் நோக்கமாகும்.
இது பெறுநரின் வாழ்க்கைத் தரத்தை நிலைநிறுத்தவும், தேவையான செலவுகளை ஈடுகட்டவும் உதவுகிறது. அத்தகைய வாழ்க்கை பொருளாதார உதவி இடைநிலையானது மற்றும் இறுதி திருமண முறிவு ஆணை வெளியிடப்படும் வரை அல்லது இறுதி வாழ்க்கை பொருளாதார உதவி தொகை முடிவெடுக்கப்படும் வரை மட்டுமே நீடிக்கும்.
இறுதி உதவி தொகை அளவை முடிவெடுக்க நீதிமன்றத்தால் எடுத்துக்கொள்ளப்படும் நிலைகள் பின்வருமாறு:
வாழ்க்கைத் துணைகளின் பொருளாதார நிலை: இரு வாழ்க்கைத் துணைகளின் பொருளாதார நிலைமை மற்றும் வருவாய் ஈட்டும் திறனை நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. கணவர் தனது மனைவியை விட ஓரளவிற்கு கூடுதலாக வருவாய் ஈட்டினால் அல்லது கணிசமான சொத்துக்களைக் கொண்டிருந்தால், அவர் வாழ்க்கை உதவித்தொகையை வழங்க வேண்டியிருக்கலாம்.
திருமணம் நீட்டிக்கப்பட்ட நாட்கள்: நீண்ட நாட்கள் நீடிக்கும் திருமணங்கள் குறுகிய நாட்கள் திருமணங்களுடன் ஒப்பிடும்போது பெருமளவு பொருளாதார உதவி வழங்கும் நிலையை ஏற்படுத்தக்கூடும்.
வாழ்க்கைத் துணைகளின் வயது மற்றும் உடல் நலம்: திருமணம் முடிவிற்கு பிறகு பொருளாதார அடிப்படையில் தங்களை ஆதரிக்கும் திறனை மதிப்பிடுவதற்கு இந்த இரண்டு அடிப்படைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
வருமானம் மற்றும் வருவாய் ஈட்டும் திறன்: வாழ்க்கைத் துணைவர்கள் இருவரின் வருமானத்தையும் எதிர்வரும் நாட்களில் அவர்கள் வருவாய் ஈட்டும் திறனையும் நீதிமன்றம் மதிப்பீடு செய்கிறது. ஒரு வாழ்க்கைத் துணைக்கு கல்வி அல்லது வேலை வாய்ப்புகளின் மூலம் தனது வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் திறன் இருந்தால், அது வாழ்க்கை உதவித்தொகை பெறுவதை தொகையை பாதிக்கலாம். எடுத்துக்காட்டாக, பெண் உயர்கல்வி பயின்று, வேலைக்குச் செல்லாத நிலையில், அவர் கற்ற கல்விக்கு வருவாய் ஈட்டும் திறன் இருக்குமேயானால், அதை நீதிமன்றம் கருத்தில் கொண்டு வாழ்க்கை உதவித்தொகை பெறுவதை முடிவெடுக்கும்.
திருமணத்தின் போது வாழ்க்கைத் தரம்: திருமணத்தின் போது தம்பதியினர் அனுபவிக்கும் வாழ்க்கை முறை மற்றும் வாழ்க்கைத் தரம் வாழ்க்கை உதவித்தொகை முடிவெடுப்பதை பாதிக்கலாம். திருமணத்திற்கு பிறகு பெறுநரின் வாழ்க்கைத் துணைக்கும் இதேபோன்ற வாழ்க்கைத் தரத்தை நிலை நிறுத்துவதை நீதிமன்றம் நோக்கமாகக் கொண்டிருக்கலாம்.
பணமல்லாத பங்களிப்புகள்: திருமணத்தின் போது வருமானம் ஈட்டாத அல்லது குறைந்த வருமானம் ஈட்டும் வாழ்க்கைத் துணையால் செய்யப்பட்ட பொருளாதாரம் அல்லாத பங்களிப்புகளையும் நீதிமன்றம் கணக்கில் எடுக்கலாம். அதாவது வீட்டுத் தயாரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு பொறுப்புகள் போன்றவை.
திருமணம் முறிவிற்கான அடிப்படை: சில சூழ்நிலைகளில், திருமணம் முடிவிற்கான அடிப்படை, ஒருவர் பிரிந்து செல்லுதல் அல்லது கொடுமை போன்றவை வாழ்க்கை உதவி தொகையை பாதிக்கலாம்.
குழந்தை கண்காணிப்பாளர் மற்றும் ஆதரவு:
ஒரு தந்தையின் குழந்தை பேணுவதற்கான உரிமை குழந்தையின் வயது மற்றும் நலன், குழந்தையின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் பெற்றோரின் பொருளாதார திறன்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைகளை பொறுத்தது.
இருப்பினும், நீதிமன்றத்தின் முதன்மையான கருத்து குழந்தையின் நலனாகும். தாய் அல்லது தந்தைக்கு என்றெல்லாம் குறிப்பிட்ட முன்னுரிமை இல்லை. மேலும் குழந்தைக்கு ஒரு நிலையான மற்றும் வளர்ப்பு சூழலை வழங்கக்கூடிய பெற்றோரை நீதிமன்றம் கருத்தில் கொள்ளும்.
குழந்தையின் தேவைகளைப் நிறைவேற்றம் செய்வதற்கும் நிலையான சூழலை வழங்குவதற்கும் தான் சிறந்த பொருத்தமானவர் என்பதை உறுதி செய்ய முடிந்தால் மட்டுமே ஒரு தந்தை குழந்தைக்கான காப்பாளர் உரிமையே நாட முடியும்.
சில சூழ்நிலைகளில், பெற்றோர் இருவரும் திருமணம் முறிவிற்கு பிந்தைய குழந்தையின் வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபடும் கூட்டு காவலில் அல்லது வருகை உரிமைகளைத் தேர்வு செய்யலாம்.
குழந்தை பேணுவதற்கான பொருளாதார உதவி: இது குழந்தையின் பாதுகாப்பை கொண்ட, அதே வேளையில் பொருளாதார அடிப்படையில் தாழ்ந்த நிலையில் உள்ள வாழ்க்கைத் துணைக்கு வழங்கப்படும் செலவினங்களுக்கான தொகையாகும்.
பின்வரும் அடிப்படைகள் குழந்தை ஆதரவாக வழங்கப்படும் தொகையை முடிவெடுக்கிறது:
பெற்றோர் இருவரின் வருமானம்: பெற்றோர் இருவரின் வருமானமும் பொருளாதார நிலையும் அடிப்படையானதாகும். ஆண்கள் மனைவியை விட வருவாய் ஈட்டுகிறார்கள் என்றால், குழந்தையின் பொருளாதார தேவைகளுக்கு ஆண்கள் பெருமளவு பங்களிப்பு செய்ய வேண்டியிருக்கும்.
குழந்தையின் தேவைகள்: கல்வி, உடல் நலம், வாழ்க்கை முறை மற்றும் பிற செலவுகள் உள்ளிட்ட குழந்தையின் தேவைகளை நீதிமன்றம் கருத்தில் கொண்டு பொருத்தமான தொகையை முடிவெடுக்கிறது.
வாழ்க்கைத் தரம்: திருமணம் முடிவிற்கு முன் குழந்தையின் வாழ்க்கைத் தரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, குழந்தையின் வாழ்க்கைத் தரம் முடிந்தவரை நிலை நிறுத்தப்படுவதை உறுதி செய்கிறது.
குழந்தைகளின் வயது: இளைய குழந்தைகளுக்கு பெரியவர்களை விட வெவ்வேறு தேவைகள் இருக்கலாம்.
கண்காணிப்பாளர் ஏற்பாடு: கண்காணிப்பாளர் ஏற்பாடு (ஒரே, கூட்டு அல்லது பகிரப்பட்ட காவலில்) குழந்தை ஆதரவின் அளவை பாதிக்கலாம். முதன்மைக் காவலில் உள்ள பெற்றோர் காவலில் இல்லாத பெற்றோரிடமிருந்து பெருமளவு ஆதரவைப் பெற வாய்ப்புள்ளது.
கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள்: குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணம் மற்றும் அது தொடர்பான செலவுகளையும், மருத்துவம் மற்றும் உடல் நலம் சார்ந்த செலவுகளையும் நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது.
பணம் செலுத்தும் திறன்: பொருளாதார நெருக்கடியை அனுபவிக்காமல் குழந்தை ஆதரவை வழங்குவதற்கான பணம் செலுத்தும் பெற்றோரின் திறனையும் நீதிமன்றம் மதிப்பிடுகிறது. ஒருவருக்கு ஒரு மகள் இருந்தால், மகளின் திருமணம் வரை, விரிந்து சென்ற வாழ்க்கை துணை வழங்கும் பண உதவி மூலம் ஏற்படும் செலவினங்களுக்கு மனைவி பொறுப்பாக இருப்பார். இதில் கல்விச் செலவு, மருத்துவச் செலவுகள், தங்குமிடம் மற்றும் அவரது திருமணம் தொடர்பான செலவுகளும் அடங்கும். இருப்பினும், ஒரு மகனைப் பொறுத்தவரை, அவர் முதிர்ச்சியடையும் வயதை அடையும் வரை பராமரிப்பு கட்டணங்களை செலுத்துவதற்கு மட்டுமே ஒருவர் பொறுப்பாக இருப்பார்.
ஒரு சிறப்புக் குழந்தையைப் பொறுத்தவரை, அவர்கள் முதிர்ச்சியடைந்த வயதை அடைந்த பிறகும் பேணுவதற்கான செலவினங்களை வழங்க வேண்டியிருக்கலாம்.
குழந்தை கண்காணிப்பில் தந்தையின் உரிமைகள்:
ஒரு குழந்தையின் காவலுக்கான உரிமை, குழந்தையின் வயது, அவரது விருப்பம் மற்றும் நலன் மற்றும் பெற்றோரின் பொருளாதார திறன்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைகளை பொறுத்தது.
குழந்தையின் தேவைகளை வழங்குவதற்கு நிலையான சூழலை யாரால் வழங்க முடியுமோ அவரே சிறந்த பொருத்தமானவர் என்பதை உறுதி செய்ய முடிந்தால் மட்டுமே ஒரு தந்தை குழந்தைக்கான காவலை நாட முடியும்.
இந்து சட்டம்: இந்து சிறுபான்மையினர் மற்றும் பாதுகாவலர் சட்டம், 1956 இன் கீழ், குழந்தை ஐந்து வயதிற்குட்பட்டவராக இருந்தால், காவல் உரிமை எவ்வித கேள்வியும் இல்லாமல் தாயிடம் செல்கிறது. குழந்தையை கவனித்துக்கொள்ள தாய் தகுதியற்றவர் என்று நீதிமன்றம் கருதினால் மட்டுமே தந்தைக்கு குழந்தையின் காவலை பெரும் உரிமை வழங்கப்படும். குழந்தை பெரியவராக இருந்தால், கவனிப்பு இரு பெற்றோரிடமும் செல்லலாம்.
இஸ்லாமியர் சட்டம்: முதல் மற்றும் முதன்மையான உரிமை தாயிடம் உள்ளது. இது "ஹிஜனாத் உரிமை (Right of Hizanat)" என்று அழைக்கப்படுகிறது. தனது மகனை காவலில் வைப்பதற்கான தாயின் உரிமை அவருக்கு ஏழு வயதாக இருக்கும்போது முடிவடைகிறது. ஆனால் மகள் பருவமடையும் வரை அவரது காவலில் வைக்க அவளுக்கு உரிமை உண்டு.
கிறிஸ்தவ சட்டம்: கிறிஸ்தவ சட்டத்தில் குழந்தை பாதுகாப்பு உரிமைகள் வரையறுக்கப்படாததால், இவை இந்திய திருமண முறிவு சட்டம், 1869 இன் பிரிவு 41 ஆல் மேலாண்மை செய்யப்படுகிறது. குழந்தையின் நலனை மனதில் வைத்து பாதுகாப்பை முடிவெடுக்க நீதிமன்றத்திற்கு உரிமை உண்டு. மேலும் குழந்தையை கவனித்துக்கொள்வதற்கு அவர்கள் இருவரும் தகுதியற்றவர்கள் என்று நீதிமன்றம் கருதுமே ஆனால், இருவருக்கும் குழந்தையை பேணுவதற்கான உரிமை மறுக்கப்படலாம்.
உங்கள் பொருளாதார நிலையை எவ்வாறு பாதுகாப்பது?
திருமணம் முறிவில் பெருமளவு சிக்கலான பகுதி செல்வங்கள் மற்றும் சொத்துக்களைப் பிரிப்பதாகும். ஒருவருக்கு ஒருவர் ஒப்புதல் பெற்று திருமணம் முறிவு வழக்கில், இது வாழ்க்கைத் துணைகளிடையே தீர்க்கப்படுகிறது.
ஆனால் ஒரு சிக்கல்கள் நிறைந்த திருமண முறிவில், இரு வாழ்க்கைத் துணைகளின் அனைத்து பொருளாதார சூழல்களும் ஆராய்வதன் மூலம் நீதிமன்றம் ஒரு முடிவை எடுக்கிறது. வருவாய் பெறும் தொழில் வல்லுநர்களின் பொருளாதார நிலையை அளவிடுவது எளிதானது என்றாலும், வருமானம் ஏற்ற இறக்கமாக இருப்பதால் வணிக உரிமையாளர்களுக்கு இது சிக்கலானது.
ஒருவரின் பொருளாதார நிலைமை குறித்த விரிவான பார்வையை வழங்க அனைத்து கடன்களையும் சேர்ப்பது நல்லது. நபரின் வருமானத்தை கணிசமாக பாதிக்கக்கூடிய எந்தவொரு சூழ்நிலையும் ஏற்படுவதாக இருந்தால், உண்மையை நீதிமன்றத்தின் அறிவுக்கு கொண்டு வர வேண்டும்.
கூட்டு சொத்துக்கள் பெரும்பாலும் ஒரு சிக்கலான பகுதியாகும். பல சூழ்நிலைகளில், அத்தகைய சொத்துக்களை கையகப்படுத்துவதில் பங்குதாரரை விட கணவரின் பங்களிப்பு பெருமளவு இருக்கும். ஆனால் பிளவு சமமாக செய்யப்படும்போது அவை குறைக்கப்படும். இத்தகைய சூழ்நிலைகளைத் தவிர்க்க, பொருளாதார அடிப்படையில் நீங்கள் பின்தங்கியிருக்காமல் இருக்க உரிமையைப் பிரிப்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். உங்கள் செல்வத்தின் பெரும்பகுதியை நீங்கள் இழக்க மாட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்த, சொத்து மற்றும் சொத்துக்கள் தொடர்பில் உங்கள் சட்ட உரிமைகள் குறித்து விழிப்புடன் இருப்பது மட்டுமல்லாமல், திருமணம் முடிவு நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பு தகுந்த முன்னெச்சரிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளை எடுப்பதும் அடிப்படை.
உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள்: நீங்கள் ஒரு வழக்கறிஞரைக் கலந்தாலோசித்தாலும் அல்லது சொந்தமாக ஆராய்ச்சி செய்தாலும், செல்வங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்து உங்கள் சட்ட உரிமைகளை அறிந்து கொள்வது அடிப்படை. இதனால் இவை மீதான உங்கள் உரிமைகோரலை நீங்கள் இழக்க மாட்டீர்கள். எடுத்துக்காட்டாக, மனைவியின் சீதனங்கள் மீது உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இதில் திருமணத்திற்கு முன்னும் பின்னும் தனது தாய் தந்தை மற்றும் அவர்கள் குடும்பத்தாரிடமிருந்து ஒரு பெண் பெற்ற அனைத்து அசையும், அசையா சொத்துக்கள் அல்லது பரிசுகள் அடங்கும். இதேபோல், ஆணின் மூதாதையர் சொத்தின் மீது மனைவிக்கு எந்த உரிமையும் இல்லை.
உங்கள் சொத்துக்கள் மற்றும் கடன்களை அறிந்து கொள்ளுங்கள்: அனைத்து மூலங்களிலிருந்தும் உங்கள் வருமானம், வீட்டுச் செலவுகள், கடன்கள் மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுங்கள். உங்கள் சேமிப்பு மற்றும் முதலீடுகள், நகைகள் மற்றும் பிற சொத்துக்களின் பட்டியலை உருவாக்கவும். வங்கி அறிக்கைகள், முதலீடுகள், சொத்து பத்திரங்கள், வரி வருமானங்கள், காப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் நீங்கள் இருவரும் கூட்டாக வைத்திருக்கும் வேறு ஏதேனும் சொத்துக்கள் அல்லது கடன்கள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய பொருளாதாரத் தொடர்பான ஆவணங்களையும் சேகரிக்கவும். உங்கள் வாழ்க்கைத் துணையின் வருமானம் ஏதேனும் இருந்தால், அதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அனைத்து கடன்களையும் தனித்தனியாகவும், இருவரும் சேர்ந்த நிலையில் மதிப்பீடு செய்து, இவை சரியான முறையில் பிரிக்கப்படுவதை உறுதிசெய்க. சொத்துக்களைப் போலவே, கடன்கள் எந்த வகையான கடன், யாருடைய பெயரில், அது எடுக்கப்பட்ட நோக்கம் போன்ற அடிப்படைகளை பொறுத்து பிரிக்கப்படுகின்றன. முடிந்தால், மனைவியுடன் ஒரு இணக்கமான தீர்வுக்கு வாருங்கள். இதனால் முடிவு நீதிமன்றத்திற்கு விடப்படாது. இது தொடர்பில் மனைவி எடுத்து வைத்த தகவல்கள் மற்றும் குற்றச்சாட்டுகளைப் பொறுத்து கணவனை விட மனைவி பெருமளவு பயனடைய முடியும்.
உங்கள் பொருளாதார கணக்குகளை பிரிக்கவும்: உங்கள் பொருளாதார கணக்குகளை உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து பிரிக்கத் தொடங்குங்கள். அனைத்து கூட்டு வங்கிக் கணக்குகளையும் முடித்து விடுங்கள். உங்கள் தனிப்பட்ட கணக்கிற்கு பணத்தை மாற்றுங்கள். கூட்டு கடன் அட்டைகளை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் மற்றும் அனைத்து நிலையான வைப்புத்தொகை மற்றும் பிற கூட்டு முதலீடுகளையும் முன்கூட்டியே முடக்குங்கள்.
வாரிசு உரிமைகளை மாற்றவும்: ஆயுள் காப்பீடு, பரஸ்பர நிதிகள், பத்திரங்கள், வங்கி மற்றும் டிமேட் கணக்குகள், வருங்கால வைப்பு நிதி, பிபிஎஃப் போன்ற அனைத்து பொருளாதார முதலீடுகளிலும் உங்களால் முன்னிலைப்படுத்தப்பட்டவர் பட்டியலில் இருந்து உங்கள் வாழ்க்கைத் துணையின் பெயரை நீக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதேபோல், அவர் ஒரு பயனாளியாக பெயரிடப்பட்ட ஒரு உயில் உங்களிடம் இருந்தால், அவரது பெயரை அகற்ற அதை மாற்றவும் அல்லது முழுமையாக அழித்து விடுங்கள்.
பெற்றோருக்கு சொத்துக்களை மாற்றுதல்: திருமணத்திற்கு முந்தைய செல்வங்கள் மற்றும் சொத்துக்கள் இருந்தால், அவற்றை உங்கள் பெற்றோரின் பெயர்களுக்கு மாற்றுவது நல்லது. இதனால் பிளவுகளின் போது இவை எடுத்துக் கொள்ளப்படாது.
ஒரு அறக்கட்டளையை உருவாக்குங்கள்: ஒருவரின் சொத்துக்களை ஒரு குடும்ப அறக்கட்டளைக்கு மாற்றுவது, பிரிந்த வாழ்க்கைத் துணையிடமிருந்து அவற்றைப் பாதுகாப்பதற்கான மற்றொரு வழியாகும். திருமணம் முறிவின் போது ஒரு முன்னாள் வாழ்க்கைத் துணைக்கு அத்தகைய சொத்துக்களுக்கு சட்டப்படியான உரிமை இல்லை.
ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துங்கள்: திருமணத்திற்கு முந்தைய சொத்து தொடர்பான ஒப்பந்தம் இந்தியாவில் செல்லுபடியாகாது. ஆனால் நீங்கள் வணிக பங்காளிகளாக ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கலாம். திருமண முறிவின் போது, இவை தானாக இரண்டு பங்காக பிரிக்கப்படும். மேலும் சொத்துக்கள் மனைவியின் பெயரில் இருந்தால், பிரிவு கணவருக்கு ஏற்புடைய தீர்வாக இருக்காது.