சாதி மறுப்பு திருமணங்கள் மற்றும் வெவ்வேறு மதங்களை சேர்ந்த திருமணமான தம்பதிகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்று 2005 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. லிவ்-இன் உறவு (திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்தல்) சட்டத்திற்கு எதிரானது அல்ல அல்ல என்பதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
இஸ்லாமியச் சட்டம்:
பிற மதத்தவரை திருமணம் செய்து கொள்வது குறித்து, இஸ்லாமிய தனிநபர் சட்டம் என்ன சொல்கிறது?
சிலைகளை வணங்கும் அல்லது நெருப்பை வழிபடும் நபரை இஸ்லாமியர் ஒருவர் திருமணம் செய்ய இஸ்லாமிய தனிநபர் சட்டம் அனுமதிப்பதில்லை என்றும், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் கூட அத்தகைய திருமணத்தை சட்டப்படி செல்லத்தக்கதாக மாற்ற முடியாது என்றும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிறப்பு திருமணச் சட்டம்:
1954 ஆம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டம் இயற்றப்பட்டது. இருவேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய திருமணத்தை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம்.
இந்த சட்டத்தின் கீழ், திருமணம் செய்து கொள்ள விரும்பும் இணைகள், இதுதொடர்பாக திருமண பதிவாளர் இடம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த பின், திருமண பதிவாளர் 30 நாட்களுக்கான ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். இந்த நாட்களில், திருமணத்தை பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட திட்டங்களை தம்பதியினர் நிறைவு செய்யவில்லை என்று எந்தவொரு நபரும் எதிர்ப்பு தெரிவிக்கலாம். அப்படி ஒரு எதிர்ப்பு எழும் சூழ்நிலையில் திருமணம் பதிவு செய்யப்படாது.
வழக்கின் பின்னணி:
திருமணத்திற்குப் பிறகும் தத்தமது மதத்தைப் பின்பற்றும் இஸ்லாமியர் மற்றும் இந்து நபர் செய்து கொள்ளும் திருமணம் சட்டப்படி செல்லாது என்றும் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய ஆணும் இந்துப் பெண்ணும் தங்கள் திருமணத்தைப் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்து, தங்களது திருமணத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தை நாடினர். திருமணத்திற்குப் பிறகு யாரும் மதம் மாறக் கூடாது என்றும், அந்தந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் இருவரும் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர்.
சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணத்திற்கு முன்னதாக திருமண பதிவாளர் இடம் விண்ணப்பித்ததாகவும், ஆனால் இரு வீட்டாரின் எதிர்ப்பினால் திருமணத்தைப் பதிவு செய்ய முடியவில்லை என்றும் தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இருவரும் தங்களது திருமணத்தைப் பதிவு செய்து, தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதில் தொடர்புடைய பெண், தமது வீட்டிலிருந்து நகைகளுடன் வெளியேறியதாக அவருடைய குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த திருமணத்தை நடத்த அனுமதித்தால், ஒட்டுமொத்த குடும்பமும் தங்களது சமூகத்தால் புறக்கணிப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் அப்பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் எதிர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றம் விளக்கம்:
இந்த திருமணம் செல்லுபடியாகுமா இல்லையா என்பதை முதலில் நீதிமன்றம் ஆய்விற்கு உட்படுத்தியது. இதைத் தொடர்ந்து, இஸ்லாமிய தனிநபர் சட்டத்தின் கீழ் இத்தகைய திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் கூறியது. இப்படியான சூழலில், தனிநபர் சட்டத்தின் கீழ் செல்லாத திருமணத்தை, சிறப்பு திருமணச் சட்டத்தினாலும் இந்த திருமணத்தை சட்டப்படியானதாக மாற்ற இயலாது என்றும் நீதிமன்றம் கூறியது.
2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், நெருப்பு அல்லது சிலைகளை வழிபடும் இஸ்லாமியர் அல்லாத ஒருவருடன் செய்துகொள்ளும் திருமணம் செல்லாது என்று கூறியுள்ளது.
அதே வேளையில், ஒரு இஸ்லாமியர் யூத அல்லது கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். அதாவது, ஆபிரகாம் மத நம்பிக்கைகளை பின்பற்றும் எந்த பிரிவு மதத்தைச் சார்ந்தவர் ஆனாலும் இஸ்லாமியர் தனிநபர் சட்டத்தின் படி திருமணம் செய்து கொள்ளலாம்.
நீதிமன்றம் தம்பதியினரின் கோரிக்கைக்கு தீர்வாக, இங்கே பெண் சிலைகளை மற்றும் நெருப்பை வழிபடும் இந்து மதத்தை பின்பற்றுவதால், சட்டப்படி இஸ்லாமியருடன் ஆன திருமணம் செல்லாததாக உள்ளது. பெண், ஆபிரகாம் மத நம்பிக்கைகளுக்கு உட்பட்ட ஏதாவது ஒரு மதத்தை தமது மதமாக (இந்து மதத்திலிருந்து மாறி) ஏற்றுக் கொண்டால், இதே இஸ்லாமியருடன், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தமது திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
தம்பதியானரின் வழக்காடல்:
இந்த வழக்கில், சிறப்பு திருமணச் சட்டத்தை விட தனிநபர் சட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்றும், தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்காடினர். ஆனால் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் இதற்கு உடன்படவில்லை. திருமணத்திற்கு தடை இருந்தால் இந்த சட்டத்தால் அதை செல்லுபடியாக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், காவல்துறை பாதுகாப்பு தொடர்பான அவர்களது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கதா?
பல வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாற்றான கருத்தை முன்வைக்கின்றனர்.
மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, சிறப்பு திருமணச் சட்டத்தை அமல்படுத்துவதன் நோக்கங்கள் சிதைப்பதாக வல்லுனர்கள் கருதுகின்றனர். சிறப்பு திருமணச் சட்டத்தின் நோக்கங்கள், "திருமணம் செய்து கொள்பவர்களுள் எந்தவொரு தரப்பினரின் மதம் அல்லது நம்பிக்கையை பொருட்படுத்தாமல்” சிறப்பு திருமணச் சட்டம் அனைத்து இந்தியர்களின் திருமணத்தையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்துகொள்பவர்கள் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தேவைப்படும் நிபந்தனைகளுக்கு இணங்கினால், அவர்கள் "திருமணத்திற்காக எந்த பழக்கவழக்கங்களையும் ஏற்றுக்கொள்ளலாம்" என்று அது கூறுகிறது.
இது சட்டப்படி சரியான முடிவு அல்ல. இது உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படும். இந்த முடிவு சிறப்பு திருமணச் சட்டத்தின் அடிப்படைத் தேவையை எடுத்துக் கூறவில்லை. இச்சட்டம், இருவேறு மதங்களுக்கு இடையேயான திருமணங்களை எளிதாக்கும் நோக்கம் கொண்டது.
இது நீதிமன்றத்தின் கருத்தாக இருப்பினும் இது முற்றிலும் தவறானது. இஸ்லாமிய சட்டத்தில் கவனம் செலுத்தும் அதேவேளையில், சிறப்பு திருமணச் சட்டத்தின் நோக்கம் (இது வெவ்வேறு மதத்தவருக்கு இடையிலான திருமணங்களை எளிதாக்குகிறது) மற்றும் அடிப்படைகளையும் நீதியரசர் ஆய்விற்கு உட்படுத்தி இருக்க வேண்டும்.
இஸ்லாமிய சட்டம் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில், சிறப்பு திருமணச் சட்டம் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கிறது. அதாவது நீதிமன்றம், இந்திய சட்ட திட்டங்களை எள்ளளவும் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல், இஸ்லாமியர் தனிநபர் சட்டத்தை மட்டுமே முதன்மைப்படுத்தி தனது கருத்தை வழங்கி உள்ளது தவறான வழிகாட்டுதலாக அமைகிறது.
இதனால் திருமணங்கள் பாதிக்கப்படுமா?
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, வெவ்வேறு மதத்தவருக்கு இடையேயான திருமணங்களை பாதிக்குமா?
இந்த வழக்கை பொருத்தமட்டில், தம்பதியினருக்கு இடையேயான திருமண உறவை தடை செய்யவில்லை. இங்கே, பெற்றோர் மற்றும் சமூகத்தினரின் எதிர்ப்பினால் பதிவாளர் திருமணத்தை பதிவு செய்ய மறுத்துள்ளார். ஏனெனில், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ், திருமணத்திற்கு எந்த தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது.
நீதிமன்றத்தின் இந்த கருத்தினால், பார்சி மதத்திலும், அவர்களது தனிப்பட்ட சட்டம், எந்த பிற மதத்தவரையும் திருமணம் செய்யக்கூடாது என்று உள்ளது. சட்டப்படியான மனிதர்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க நடைமுறைகளை பின்பற்றாமல், மத நம்பிக்கைகளின் அடிப்படையில் தீர்ப்புகளும் கருத்துக்களும் நீதிமன்றத்தால் வழங்கப்படுவது நாட்டில் வாழும் மனிதர்களுக்கு நன்மை விளைவிக்காது.